
என்னவளுக்கு...
உரிமையில் எழுதுகிறேன்... உவமையில் உளறுகிறேன்..
எப்படி கடிதம் எழுத தொடங்குவது...எனக்குள் போராட்டம்..
எது எப்படியோ...என் எண்ணத்தை எதுகை மோனையில் குதறாமல்..
அதன் போக்கிலே விட்டுவிடுகிறேன்..
இதுவரை காலம் என்னை கவிதை எழுத வைக்கவில்லை..
ஆனால் உன் காதல் என்னை எழுத வைக்கிறது...
காதலில் கருத்து சொல்ல நான் கண்ணதாசனும் இல்லை..
கவிதையில் காதலை சொல்ல நான் வைரமுத்துவும் இல்லை..
ஏனென்றால் உன் நினைவுகளை சுமக்க வைர வரிகளுக்கே தகுதி இல்லை..
என் குருதியில் காதல் குழப்பம் குழைத்தவளே..
என் மனதினில் மாற்றம்... சிறு தடுமாற்றம் தந்தவளே..
என் காதல் மன தோட்டத்தில் காதலாய் பூத்த ஒரே ஒரு பூவே..
உன் நினைவுகளால் - தூரத்தில் நின்றாலும் பக்கத்தில் தெரிகின்றாய்..
மன கனவுகளில் - பக்கத்தில் இருந்தாலும் பக்காவாய் தெரிகின்றாய்.
உன் அழகினால் என் கண்களுக்கு விருந்தளிக்கும் உனக்கு ...
உன் அன்பினால் என் உள்ளத்துக்கு விருந்தளிக்கும் உனக்கு ..
காலமெல்லாம் கணவனை விருந்தோம்பல் அளிக்க விருப்பம் எனக்கு...
ஆசை பட்ட என் உள்ளம் .. அமைதிக்கான விரும்புகிறேன்...
உன் விருப்பம் அறிய ... உன் கண் அசைவை நோக்கி தவம் இருக்கிறேன்..
காதல் தவம்..
காதலை வேண்டும் தவமல்ல...உன் காதலை வேண்டி தவம்..
என் தவ முயற்சி தவறாமல் வெற்றி பெரும்
என்ற நம்பிக்கையில்...
உன்னவன்...