Alagiyaithal Chat


நீ அருகினில் இருக்கும் பொழுது


அழகாய் பேச

தமிழில்

ஆயிரம் வார்த்தைகள்

இருந்தும்

ஒன்று கூட

கிடைப்பதில்லையே

நீ

அருகினில்

இருக்கும் பொழுது… .....!!!!


என் கவிதைகள் உனக்காக மட்டும்....


என் காதல் கவிதைகள்

உனக்காக மட்டும்....


ஆம் உனக்காகவே எழுதுகிறேன்

உன்னை சேரவே துடிக்கிறது

என்னைபோல என் கவிதைகளும்.....


நீண்ட நேர தனிமை

வெள்ளை காகிதம்

அதில் உன்னை பற்றி சில வரிகள்

காதலில் நனைகிறது காகித பக்கங்கள்

என் இதயமும்தான்...


காற்றோடு பேசும் உன் விழிகள்

காகிதத்தோடு பேசும் என் விரல்கள்

காற்றோடு காதல் தவழ

என் காகிதத்தோடு கவிதை தவழ்கிறது.....


உன் மௌனம் தான்

என் கவிதையின் பிறப்பிடம்

உன் மௌனத்தை தினம்

மொழி பெயர்த்து கவிதையாக்கினேன்.....


உன்னோடு பேச நினைத்தேன்

வார்த்தை வரவில்லை

அதை எழுதி வைத்தேன் கவிதையென....


என் காதலை போல்

என் கவிதையும் அழகுதான்

உன்னை பற்றி எழுதுவதால்....


என்னை அறியாத நீ

என் கவிதைகளை அறிவாயா.?...

என் காதலையும் அறிவாயா.?...


என் காதலின் முகவரி நீ என்றால்

என் கவிதையும் முகவரி நீதான்....


காதலித்துவிட்டேன்

கவிதையும் எழுதிவிட்டேன்

இன்னும் என்ன கற்று தர போராய் ??....


நினைவு நாள்


கவிதைகள் படித்தேன் கற்பனைகள் வந்தது

கற்பனைகளை வளர்த்தேன் காதல் வந்தது

காதலை வளர்த்தேன் கண்ணீர் வந்தது

கண்ணீரை வரவேற்றேன்,கவலைகள் வந்தது

கவலைகளை வளர்த்தேன்,அவள் நினைவுகள் வந்தது

அவள் நினைவுகளை வளர்த்தேன் என் நினைவு நாள் வந்தது



உன் பிரிவு ...


வடிக்கின்ற கண்ணீரின்

முதல் துளியும்

துடிக்கின்ற இதயத்தின்

கடைசி துடிப்பும்

நீ என்னை

நீங்கினால் மட்டுமே .......



உன்னிடத்தில் நான்


மறக்க நினைத்து தோற்றது


காதலில் மட்டுமல்ல


என் வாழ்விலும்தான்


ஒவ்வொரு விடியலிலும்


உன்னிடத்தில் உன் மனதில்


என் காதல் இருப்பாதாக கற்பனை


காதல் ஆனது எனக்கு


உன் காதல் என்னை காதலிக்க வில்லை


என்று உணரும் பொது உயிரும்


வெறுக்கிறது என்னை..!!!