
என் காதல் கவிதைகள்
உனக்காக மட்டும்....
ஆம் உனக்காகவே எழுதுகிறேன்
உன்னை சேரவே துடிக்கிறது
என்னைபோல என் கவிதைகளும்.....
நீண்ட நேர தனிமை
வெள்ளை காகிதம்
அதில் உன்னை பற்றி சில வரிகள்
காதலில் நனைகிறது காகித பக்கங்கள்
என் இதயமும்தான்...
காற்றோடு பேசும் உன் விழிகள்
காகிதத்தோடு பேசும் என் விரல்கள்
காற்றோடு காதல் தவழ
என் காகிதத்தோடு கவிதை தவழ்கிறது.....
உன் மௌனம் தான்
என் கவிதையின் பிறப்பிடம்
உன் மௌனத்தை தினம்
மொழி பெயர்த்து கவிதையாக்கினேன்.....
உன்னோடு பேச நினைத்தேன்
வார்த்தை வரவில்லை
அதை எழுதி வைத்தேன் கவிதையென....
என் காதலை போல்
என் கவிதையும் அழகுதான்
உன்னை பற்றி எழுதுவதால்....
என்னை அறியாத நீ
என் கவிதைகளை அறிவாயா.?...
என் காதலையும் அறிவாயா.?...
என் காதலின் முகவரி நீ என்றால்
என் கவிதையும் முகவரி நீதான்....
காதலித்துவிட்டேன்
கவிதையும் எழுதிவிட்டேன்
இன்னும் என்ன கற்று தர போராய் ??....
0 comments:
Post a Comment