Alagiyaithal Chat


:::ஒரு நொடி முத்தம்:::

 
 அவளை பல மாதங்களாக
பிரிந்து பிரிந்து தவிக்கும்
இந்த நாட்களிலும்
இனிக்கின்றது?!?!
முதன் முதலில் அவள் கொடுத்த
"ஒரு நொடி முத்தம்"
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

என் கண்ணின் இமைகள் நீ

 
 உயிரே.....

என்னருகே நீ இருந்தபோதும்
என் தேவதையை தேடி சென்றேன்...

நான் சென்ற திசையில்
நீதான் இருந்தாய்...

என்னருகில் நீ இருந்ததால்
உன் நிழலை நான் அறியவில்லை...

கண்மூடி நித்திரை கொண்டேன்...

என் கனவில் நீதான் வந்தாய்...

கனவில் வந்தவளே ...

நாளை வருவேன் ...

உன் கரம் பற்ற ...

என் தேவதை நீ என.....
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

உன் காதல் சொல்வாயா....

 
 மலர் தொட்டு செல்லும் தென்றல் போல்,
மனம் தொட்டு சென்றாயே...,

புது வாசம் வீசும் பன்னீர் போல்
என் மனமும் மணக்குதே....

மனம் திருடிபோனவளே மணம் செய்ய வருவாயா....

என் உயிர் உதிரும் முன்னேனும்
உன் காதல் சொல்வாயா......
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

மலர்கள்

 
 அவள் முகத்தில் விழிக்க வெட்கப்பட்டு

கூந்தலில் தஞ்சம் புகுந்ததோ ???

- மலர்கள்!!!!
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

காதலுடன்....

 
 பொய் சொல்கிறாய்.......!
ஆனாலும் எனை வெல்கிறாய்....!

காத்திருக்க வைத்தாலும்
காதலுடன் நிற்கிறாய்.....!

மாறாத புன்னகையில்
மங்கை இவளை கொல்கிறாய்...!

தவறுகள் செய்தாலும்
தாயவள் போல் பார்க்கிறாய்....!

கண்ணீர்தான் சிந்தினாலும்
கண்துடைக்க விரல் தருகிறாய்...!

விழிப்பார்வை ஒன்றிலே
விளையாடிபோகிறாய்....!

உன் அன்பே போதுமென
உயிர் உருக கேட்கிறேன்....!

வழித்துணையாய் வந்தாய் அன்பே
வாழ்வினை தந்தாய் இன்றே....!
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****