Alagiyaithal Chat


காதலுடன்....

 
 பொய் சொல்கிறாய்.......!
ஆனாலும் எனை வெல்கிறாய்....!

காத்திருக்க வைத்தாலும்
காதலுடன் நிற்கிறாய்.....!

மாறாத புன்னகையில்
மங்கை இவளை கொல்கிறாய்...!

தவறுகள் செய்தாலும்
தாயவள் போல் பார்க்கிறாய்....!

கண்ணீர்தான் சிந்தினாலும்
கண்துடைக்க விரல் தருகிறாய்...!

விழிப்பார்வை ஒன்றிலே
விளையாடிபோகிறாய்....!

உன் அன்பே போதுமென
உயிர் உருக கேட்கிறேன்....!

வழித்துணையாய் வந்தாய் அன்பே
வாழ்வினை தந்தாய் இன்றே....!
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

0 comments:

Post a Comment