Alagiyaithal Chat


பயணம்


 

நினைவுகள்


 

சந்தோசத்துக்காக


  

மனது


  

கவிதை


  

கண்கள்


 

சோகம்


 

கல்லறை


 

கண்ணீர்


 

எந்த இடத்தில் விழுந்திருக்கிறோம்?



இளைஞர்கள் இருவர் இருந்தனர். அவர்களுக்கு வேட்டையாடுவது என்றால் அவ்வளவு விருப்பம். எனவே, அவர்கள் இருவரும் அடிக்கடி காட்டுக்குச் செல்வது வழக்கம். ஒருநாள் சிறிய விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வேட்டையில் இரண்டு காட்டு எருமைகள் கிடைத்தன. அவற்றை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டனர்.

இரண்டு காட்டு எருமைகளையும் விமானத்தில் ஏற்ற முடியாது, எடை அதிகம் என முரண்டு பிடித்தார் விமான ஓட்டுனர். உடனே இளைஞர்கள் இருவரும், “கடந்த வாரமும் எங்களுக்கு இதே போல் இரண்டு எருமைகள் கிடைத்தன. அப்போது எங்களுடன் வந்த விமான ஒட்டுனர், இரண்டையும் ஏற்றிக்கொள்ள சம்மதித்தாரே!” என்றனர்.

வேறு வழியின்றி இரண்டு எருமைகளையும் ஏற்ற சம்மதித்தார் ஓட்டுனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பாரம் தாங்காமல் தடுமாறி வயல்வெளியில் விழுந்தது.

உள்ளே இருந்த இளைஞர்கள் இருவரும் பலத்த காயங்களுடன் மெல்ல வெளியே வந்தனர்.

ஒருவன் கேட்டான் 'இப்ப நாம எந்த இடத்துல விழுந்திருக்கோம்?”

அடுத்தவன் பதில் சொன்னான் : 'போன வாரம் விழுந்தோமே, அதுக்குப் பக்கத்து வயல்லதான்!”

இது வேடிக்கை கதை தான்! ஆனால், விளக்குகின்ற உண்மை மிகப் பெரியது. அனுபவங்களைப் பாடமாக எடுத்துக்கொள்ளாவிட்டால் அடிக்கடி விழவேண்டி இருக்கும். தவறு செய்யாதவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது, அவர்கள் மகான்கள்! ஆனால், செய்த தவறை திரும்ப திரும்ப செய்வது மகா தவறு!

அதே தவறைத்தான் திரும்பவும் செய்கிறோம் என்பதை செய்து முடித்து வினையை அனுபவிக்கும்போது தான் மெல்ல விளங்கிக்கொள்ள ஆரம்பிக்கிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால், விழுந்த இடத்திலேயே திரும்ப விழும்போதுதான் அட ஏற்கனவே இங்கே தானே ஒரு முறை விழுந்தோம் என்ற ஞாபகம் வருகிறது.

முதல் முறை செய்வது தான் தவறு, திரும்பவும் செய்தால் அது தப்பு! “தவறு செய்தவன் திருந்தப் பார்க்கனும், தப்பு செய்தவன் வருந்தியாகனும்!” (என்னைப் போல!)

என் அம்மாவுக்கு…

 
கரு ஏற்று உருத் தந்த உத்தமியே…
உன் கருவறை எனக்கு சிறையல்ல
நான் கைதியாகவே காலமெல்லாம்
உன்னுள் சிறைப்பட்டிருக்க விரும்புகிறேன்.
 
அம்மா என் ஆன்மாவே - நீ
ஆயிரம் ஆண்டவனுக்கும் ஈடில்லை!
என் உயிரெழுத்தின் உண்மைப் பொருள் நீயம்மா!
 
உலக மொழிகளை எல்லாம்
அணிதிரட்டிச் சொன்னாலும் - அங்கு
முற்றுப் பெறாமல் நிற்கும் உன் அன்பு!
 
எனக்கு பிறப்பொன்றைக் கொடுத்த
உன் பிறப்பிற்காய் இன்று
இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்...
 
(27.08 - என் அன்பு அம்மாவின் பிறந்த நாள்!)

மானங்கெட்ட மனது…

 
உள்ளத்தின் அன்பை
உதட்டால் உணர்த்தத்
தெரியவில்லை எனக்கு!
ஊமையாகி அழுகிறது
உணர்வற்று மனது!
விரட்டிப் பார்த்தும்
விலக மறுக்கும் உன்
நினைவுகளுக்கு மத்தியில்
வெட்கங் கெட்டதாய்
விரைகிறது விரல்கள்
குறுஞ்செய்தி அனுப்பி
குசலம் விசாரிக்க!
என்ன நினைவு
இருக்கக்கூடும் உனக்கு?
என் கண்ணீர் கடலில்
கப்பல் விட்டு
களியாட்டம் நடத்துவதை தவிர?
தூக்கம் கெட்டு
காதல் வளர்த்தேன்
மானங்கெட்ட மனது
மறக்க மறுக்கிறது!

நீயும் என் பிள்ளை



கண்களில் விதையாய் விழுந்து
நெஞ்சினில் விருட்சமானாய்…

பெறா தாயுமானேன்
பிறவாப் பிள்ளையுமானாய்…

சந்தித்த வேளை
சிந்திக்க நேரமில்லை…
நானே நீயானாய்!

முடிவுரை

 

 உன்னை உயிராய் சுமந்ததாலா
என் கண்ணீரைக் கொண்டே
என்னுள் கல்லறை கட்டினாய்?

என்னவனே

எப்படி முடிந்ததுன்னால்?

முன்னுரையில்லா என் வாழ்வுக்கு

முடிவுரை எழுத?

அன்னையர் தினம்

 

அம்மா என்ற மந்திரம், அது அன்பை விதைக்கும் எந்திரம்!
அந்திப் பொழுதில் அவள் அழகாய் ஊட்டிய நிலாச்சோறு
நினைத்துப் பார்க்கையில் தேனாய்ச் சுவைக்கும் எம் அனைவருக்கும்!
அவள் விரல் பட்ட உணவில்தான் நாம் உயிர் வளர்த்தோம்!
அவள் இதழ் சிந்திய வார்த்தையை உச்சரித்துத்தான்
மொழி பழகினோம்! அன்னையைப் பற்றிப் பாடாத கவிஞர்களுமில்லை,
அவள் புகழ் கூறாத காவியங்களுமில்லை! என்றாலும்….
அவளைப் பற்றிச் சொல்ல எத்தனிக்கும் போதெல்லாம்
சொற்களின் பொலிவு போதாமையை உணர்கின்றோம்!
குழந்தைக்கான ஒரு தாயின் தேவையும் தாய்க்கான ஒரு
குழந்தையின் தவிப்பும் பிணைக்கப்பட்ட அன்பியல் கூற்று.

பிள்ளைகளுக்காக ஒரு தாய் இந்த உலகையே இழக்கத் துணிவாள்.
ஆனால், தன் பிள்ளைகளை இழக்க எந்தத் தாயும் துணிவதில்லை.
பிரிந்துவிடும் எனத் தெரிந்தும் மலரை சுமக்க மறுப்பதில்லை தாய்ச்செடி.
பிரியும் பூவையும் பிரியத்துடன் சுமப்பதை தன் பாக்கியமாகக் கருதும் அது. காலமும் வாழ்க்கையும் இருவேறு திசைகளில் பயணிக்கையில்
பிரிவுகள் என்பவை நிச்சயிக்கப்பட்டவையே.

போரினால் தம் பிள்ளைகளைப் பிரிந்து தவிக்கும்
தாய்மையின் தவிப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
வலிகளின் இழைகளுக்குள் இறுக்கப்பட்ட தாய்மையின் உணர்வுகளை
அப்படியே வெளிக்கொண்டுவரவும் எம்மால் இயலாது. காரணம்
அவை வெறுமனே வார்த்தை வெளிப்பாடுகளுக்குள் கட்டுப்படுவதில்லை.
மூன்று தசாப்தகால யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டதை
உலகம் அறிவித்துக்கொண்டிருக்கிறது.
பிள்ளைகளைப் பிரிந்த தாய்மாரும் தாய்மாரைத் தேடும் பிள்ளைகளும்
கண்ணீர் தேங்கிய விழிகளுடன் அந்த அறிவிப்பை
வெறித்துப்பார்த்தபடி கடந்து போகின்றார்கள்.
அவர்கள் துயரங்கள் முடியாத போதில் யுத்தம் முடிந்தது பற்றி
அவர்களுக்கு அக்கறை கிடையாது.
அன்னையர் தினத்திற்கும் அர்த்தம் கிடையாது!

கருவேற்று உருத்தந்த உத்தமி அன்னையின் அன்பினை
அகிலத்திற்கு எடுத்துணர்த்தும் வகையில் அன்யைர் தினத்தை சிறப்பிக்கும் நாம்
போரினால் பிரிவுற்ற உறவுகளுக்காகவும் பிரார்த்திப்போம்!

இயேசு


 

முடிந்துவிடும்


 

என்னோடு நீ


  

உனக்கு கூடவா ?


 

தோற்பதில்லை


 

நிலவு


 

முத்தம்

  
 

மேகம்


 

கடிதம்


  

கவிதை


  

காதல் காவியம்


  

கண்ணீர்


 

உள்ளதையே


  

காதல்


  

காதலில் கூட


  

கருத்தறியாக்


 

காதல்


 

என் அன்பை அறியாமல்


  

அறிய மாட்டேனா


 

அழ வைக்கிறாய்


 

நீ இருந்தால்

 
உறவென்று சொல்லி கொள்ள

யாரும் இல்லா விட்டாலும்

உயிரென்று சொல்லி கொள்ள

நீ இருந்தால் போதும்.....அன்பே

உலகம்

 
முழுக்க முழுக்க
 
சர்க்கரையாக இருந்து
 
விடாதே;
 
உலகம் உன்னை விழுங்கி
 
விடும்.
வானம் தான் தூரம் என்று

நினைத்திருந்தேன்


ஆனால்


உன் அன்பு கிடைத்த பின்பு


"வானத்தை" விட உன்


பிரிவு தான் தூரம்


என்று உணர்ந்தேன்

என்னை போலவே

உன்னை நேசித்து நான் கவிதை எழுதுகிறேன்

ஆனால்


என் கவிதை கூட என்னை


நேசிக்காமல் உன்னை நேசிக்கிறது


என்னை போலவே ......

அறிந்தேன்


அழுது கொண்டே பிறந்தேன்

ஏன் இந்த பிறப்பென்று ....

நீ என் வாழ்வில் வந்த

பின்பு தான் அறிந்தேன் ....

உன் அன்புக்கு

ஆயிரம் முறை பிறக்கலாம்

என்று.....

வாழும் காதல்....


 

அழகிய கவிதை


 

என் இதயம்


  

எனக்கு நானே


 

தூவிவைத்தேன்

 
 

நண்பனே


 

கண் விழிகளில்


  
 

Option - Delete Contact


 

குழந்தையாக ..


 

உயிர்


 

மனிதனே ...!

 

பார்க்கும் திசையெங்கும்

மனிதனைப் பார்க்கிறேன் ...!


பழகும் போதுதான் தெரிகிறது ...இவர்கள்


மனிதத்தை தொலைத்தவர்களென ...!



வணங்கும் புண்ணிய பூமியில்

 பொய் வேடம் பூண்டு ,

 நகர் உலா வரும் இவர்களிடம் ...

 மனிதத்தை தேடியது தவறுதான் ...!



பார்த்து ...பழகி ...சிரித்து ...


பத்து தடவை நலம் விசாரிக்கும்


பெண்ணிடம் பல்லை இளிப்பவர்களிடம்


மனிதத்தை தேடியது தவறுதான் ...!



தன் பிள்ளை ,குடும்பம் ,இனமென

 கூட்டம் சேர்த்து கொடிபிடித்து

 சிறுமை கொண்டு அலைபவர்களிடம்

 மனிதத்தை தேடியது தவறுதான் ...!



நிற்க நேரமில்லாமல் ...


பேச நேரமில்லாமல் ...


வாழ்வின் அர்த்தம் புரியாமல் ...


பணம் பணமென்று ...காத்தாடி போல ...


காற்றடிக்கும் திசையில் ஓடுபவர்களிடம்


மனிதத்தை தேடியது தவறுதான் ...!



மரணம் என்ற ஒன்று உண்டு என

 மறந்து திரிபவர்களிர்டம்

 மனிதத்தை தேடியது தவறுதான் ...!



நீ.....


நாடு போற்றும்


மாமனிதனாக மாற வேண்டாம் ,

 மனிதனாக மட்டும் வாழ் ...

 அதுவே போதும் ...!



பாக்கியம்



என் கவிதைகள்