skip to main |
skip to sidebar
Posted by
Alex moulin
at
12:26 AM
பார்க்கும் திசையெங்கும்
மனிதனைப் பார்க்கிறேன் ...!
பழகும் போதுதான் தெரிகிறது ...இவர்கள்
மனிதத்தை தொலைத்தவர்களென ...!
வணங்கும் புண்ணிய பூமியில்
பொய் வேடம் பூண்டு ,
நகர் உலா வரும் இவர்களிடம் ...
மனிதத்தை தேடியது தவறுதான் ...!
பார்த்து ...பழகி ...சிரித்து ...
பத்து தடவை நலம் விசாரிக்கும்
பெண்ணிடம் பல்லை இளிப்பவர்களிடம்
மனிதத்தை தேடியது தவறுதான் ...!
தன் பிள்ளை ,குடும்பம் ,இனமென
கூட்டம் சேர்த்து கொடிபிடித்து
சிறுமை கொண்டு அலைபவர்களிடம்
மனிதத்தை தேடியது தவறுதான் ...!
நிற்க நேரமில்லாமல் ...
பேச நேரமில்லாமல் ...
வாழ்வின் அர்த்தம் புரியாமல் ...
பணம் பணமென்று ...காத்தாடி போல ...
காற்றடிக்கும் திசையில் ஓடுபவர்களிடம்
மனிதத்தை தேடியது தவறுதான் ...!
மரணம் என்ற ஒன்று உண்டு என
மறந்து திரிபவர்களிர்டம்
மனிதத்தை தேடியது தவறுதான் ...!
நீ.....
நாடு போற்றும்
மாமனிதனாக மாற வேண்டாம் ,
மனிதனாக மட்டும் வாழ் ...
அதுவே போதும் ...!
0 comments:
Post a Comment