Alagiyaithal Chat


தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

எனக்கு பூக்கள் பிடிக்கும் என்பதற்க்காய் 
இந்த பண்டிகை தினத்தில் 
பூ வேலைப்பாடுகள் அமைந்த புதுப் புடவையை 
எனக்காய் கட்டிக்கொண்டு 
என்னிடம் காட்டுவதற்காய் 
உன் தோழிகளோடு என் வீட்டுப் பக்கம் 
ஆசையோடு சுற்றிக்கொண்டிருக்கிறாய்… 

உனக்கு வேட்டி சட்டை பிடிக்குமென 
அணிந்து நான் உன் வீட்டுப் பக்கம் 
திரிந்துகொண்டிருப்பது தெரியாமல்… 



ஒரு கட்டத்தில் இருவரும் 
முகம் காண முடியாத சோகத்தோடு 
வீடு திரும்பிக் கொண்டிருக்கையில்… 

எதேட்சையாய் ஒரு சாலை முனையில் நேர்ந்த 
பரவச சந்திப்பில் 
நம் கண்களுக்குள் சுழன்றன 
சங்கு சக்கரங்கள்… 

அப்பொழுது சட்டென ஒரு சரவெடி வெடிக்க 
சாலை என்றும் பாராமல் 
வந்துவிட்டாய் எனக்கு நெருக்கமாய்… 

பின் உணர்வறிந்து வெட்கி ஓடிவிட்டாய் 
உன் வீட்டுப் பாதையில்… 

அங்கு வெடித்த வெடியால் 
நீ என் பக்கம் வந்ததில் 
எனக்குள் வெடித்த வெடி அடங்க 
அரைமணி நேரம் ஆனது… 



மெல்ல மாலை நேரத்தில் 
இப்பொழுது நீ என்ன செய்துகொண்டிருப்பாய் என 
பார்த்துவிட்டுப் போகலாமென 
உன் வீட்டுச் சாலைக்கு நான் வந்த பொழுது… 

கம்பி மத்தாப்புக்களை கைகளில் ஏந்தியபடி 
சின்னப் பிள்ளைப் போல 
அங்கும் இங்கும் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாய்… 

என்னைக் கண்டுவிட்ட பதட்டத்தில் 
ஒளிந்துகொண்டாய் வீட்டுக்குள்… 

பின் மெதுவாய் ஒன்றும் அறியாதவள் போல 
வெளியில் வந்து 
மற்றவர்கள் வெடிப்பதை 
கைகளைக் கட்டிக்கொண்டு 
ரசித்துக் கொண்டிருக்கிறாய் 
அப்படியே தூரத்தில் இருக்கும் என்னையும்… 



அக்கணத்தில் திடீரென 
வெடித்துவிட்ட புஷ்வானத்தைப் பார்த்து 
கண்கள் நிறைய பயத்துடன் 
உன் அன்னையை கட்டிக் கொள்கிறாய் இறுக்கமாய்… 

நான் சிரித்துவிட்டதை கண்டு 
மீண்டும் உன்னை 
தைரியமானவளாய் காட்டிக்கொள்கிறாய்… 



எனக்கென ஒருத்தி இல்லாத 
போன வருட தீபாவளியையும் 
எனக்கென நீ கிடைத்திருக்கும் 
இந்த தீபாவளியையும் 
நினைவில் உருட்டியபடி… 

உன் குறும்புத்தனங்கள் அத்தனையும் 
அவ்வளவு அழகென சொல்லியபடி… 

பட்டாசும் மத்தாப்பும் வானவேடிக்கைகளுமாய் 
மின்னிக் கொண்டிருக்கிறது 
இந்த ஊரைப் போல 
என் மனதும் தீபாவளியில்… 



இயந்திரங்களாய் சுற்றிக் கொண்டிருக்கும் நமக்கு 
இன்ப இளைப்பாறல் தரத்தான் வருகின்றன 
அடிக்கடி பண்டிகைகள்… 

அதனால் அனைத்தையும் மறந்து 
அனுபவியுங்கள் கொண்டாடுங்கள் 
இந்த கணத்தை இந்த தினத்தை… 

பிரியமானவர்களுக்கு பிரியனின் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்…
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

அவளுக்கு கல்யாணமாம்!!!!!!

அப்போது 

கொஞ்சி கொஞ்சி சொன்னாள் 
நீ இல்லாமல் 
எனக்கு வாழ்கையே இல்லை . 
என்னை கை விட்டு விடாதே 
என்று ... 

ஆனால் எப்போது 

கெஞ்சி கெஞ்சி சொல்கிறாள் 
நீ இருந்தால் 
எனக்கு வாழ்கையே இல்லை .. 
என் கையை விட்டு விடு என்று ... 

காரணம் 
அவளுக்கு கல்யாணமாம் 
பெரிய எடத்து மாப்பிளையாம் ... 
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

முத்தம் தந்தாள்



நிலவுகள் 
ஒன்று சேர்ந்திருக்க 
விண்மீனும் சூரியனும் 
அதைச்சுற்றி அலங்கரிக்க 
அந்நேரத்தில் வந்த 
மழைதுளியுடன் 
நான் பேசுகையில் 
அவள் தந்தாள் 
முத்தம் 
என் கணவில்



*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

என் இதய "தீபாவளி".........

"மத்தாப்பு" சிரிப்பிலே... 
"சங்கு" சக்கரமாய் 
சுழலவிட்டாள்.! 

என் "இதயத்தை" 

"சாட்டை" பார்வையிலே... 
"சர" வெடியாய் 
வெடிக்க செய்தாள்.! 

என் "இதயத்தை" 

"பொட்டுவெடி" பேச்சாலே... 
"புஸ்வானம்" போல் 
பொறிய வைத்தாள்.! 

என் "இதயத்தை" 

"ஏற்றி" வைத்த... 
"தீப" ஒளிகளால் 
சுடர் ஆக்கினாள்.! 

என் "இதயத்தை"
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

ஒரு உண்மை சொல்லவா...?!



நீ 
எந்த பேருந்தில் பயணித்தாலும் 
கூட்டமாகவே இருக்கிறது என்கிறாய். 

ஒரு உண்மை சொல்லவா...?! 

அந்த பேருந்தில் 
உன்னை தவிர 
வேறு யாரும் 
பயணிக்க வந்தவர்கள் அல்ல. 
நீ 
பயணிப்பதை 
பார்க்க வந்தவர்கள்...!
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

என்னோடு நீ உன்னோடு நான்

உயிரே... 

இருளை நோக்கி பயணித்த 
நான் .... 

உன்னை கண்ட நாள் முதல் 
வெளிச்சத்தில் பயணிக்கிறேன் ...... 

என் வாழ்கயின் இறுதிவரை 

நீ வருவாய் என்ற நம்பிக்கையில்....
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

நான் நீ நாம்

அன்பே.... 

நீ என்னை நேசிக்கிறேன் 
என்று சொன்னபோது ..... 

நான் விலகி சென்றேன்.... 

எனக்குள் நீ இருபது 
தெரியாமலே.....
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

நீ பதித்த முத்தத்தால்....

உயிரே.. 

இன்று முழுவதும் உன்னுடன் 
பேச ஆசைப்பட்டேன்... 

பேச வார்த்தைகள் பல இருந்தும் 

என் உதடுகள் பிரியவில்லை.... 

நீ பதித்த முத்தத்தால்...
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

மனதில் ஒரு மறைமுகம்..........

என் தொப்புள் கொடியாய் தொடர்ந்த முகம் 
என்னை தோளில்சுமந்து வளர்த்த முகம் 
பள்ளியில் பார்த்த முகம் 
கல்லூரியில் பேசிய முகம் 
பணியிடத்தில் பகிர்ந்துகொண்ட முகம் 
இல்லறத்தில் இணைந்த முகம் 
என் உதிரத்தில் உருவாகிய முகம் 

இப்படி எத்தனையோ முகம் 
என்னோடு பயணித்தாலும், 
நான் எதிர்பார்த்த முகம் 
இன்றுவரை மறைமுகமாகவே 
இருக்கிறது என் மனதுக்குள்
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

நீயே தெய்வம்

ஓடி செல்லும் 

நதிகளே----- 

கொஞ்சம் நில்லுங்க……. 


நீந்தி செல்லும் 

மீன்களே----- 

கொஞ்சம் நில்லுங்க…. 


நான் சொல்லும் 

கதையை 

கொஞ்சம் கேளுங்க----- 


தாயே !.. 

ஒரு ஜென்மம் போதாதே 

நீ தந்த அன்பு….. 


மற்றொரு ஜென்மம் 

வேண்டி நின்றேன் 

உன்னை வணங்கிட…. 


நீயும்…. 

பத்து மாதம் 

சுமந்தாயே---- 

உயிர் கொடுத்து 

என்னை ஈந்றிட…. 


நானும் இங்கு 

தூங்கிட…… 

நீயும் 

கண் விழித்தாயே 

தாலாட்டு பாடிட------
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

முதல் முத்தம்

முதல் முத்தம் 



அது 


அன்னை 

தந்த முத்தம்…… 


அன்பு முத்தம் 

அது 

பாசத்தில் 

கலந்த முத்தம்…… 


பண்பு முத்தம் 

அது 

நினைவோடு 

நிலைத்த முத்தம்…… 




இன்ப முத்தம் 

அது 

முதல் முதலாய் 

சுவைத்த முத்தம்….. 


கன்னி முத்தம் 

அது 

கன்னத்தில் 

சிவந்த முத்தம்….. 


செல்ல முத்தம் 

அது 

என உயிரில் 

கலந்த முத்தம்…. 


நான் மண்ணில் பிறந்திட----- 

அவள் 

கண்கள் சிவந்து 

இன்ப வெள்ளத்தில் 

தந்த முத்தம்

              அது 

                        என் அன்னை 

                               தந்த 

                       முதல் முத்தம்…..
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

வீசும் தென்றலுக்கு தெரிந்திடுமா.....


வீசும் தென்றலுக்கு

தெரிந்திடுமா.....

உன் அன்பில்
நனைந்திடும்
ஒரு அழகிய
மழை துளி
    நான் என்று....


**********************
மறந்து போன மாயம் என்னவோ 

என்னவளே----

உன் விழி கண்டு 
என் விழி முடாமல் உன்னை தேடிய---
நெஞ்சம் இங்கு உன் 
வருகையின் நாளை எண்ணியே....
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

அவள் இல்லையே......



விழிகள் தளர்ந்திட
தேடும் இடம் எல்லாம்
உன் நினைவுகள் இன்றி
வேறெதுவும்
இல்லை....

நானோ நடை
பிணமாய் தேடுகிறேன்
நீ இல்லை என்று
தெரிந்தும்.....


*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

ஏனோ...?

வேகமாக செல்லும் பேருந்தில் 
எல்லோருக்கும் எதிரியாய் நான்... 

மேலும் வேகமாக செல்ல வேண்டுமென்று 
எல்லோரும் நினைக்க 

நான் மட்டும் மெதுவாக செல்ல வேண்டுகிறேன் 
"என்னருகே அவளிருக்க....."


தோழியே ....

தோழியே


என்னுடன் நீ இருந்த நாட்கள் யாவும்

இனிமையே

ஏனோ இன்று நீ இருந்தும் நான்

தனிமையே

உன்னுடைய நட்பிலும்

காதல் இருந்தது - ஆனால்

என்னுடைய நட்பில்

நட்பு மட்டும் தான் இருந்தது


துரோகி

நம் நட்பிற்கு துரோகம் செய்த துரோகி


விவரித்து சொல்லிவிட்டேன் - தோழியே

விலகிவிடு

"தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க தோழி"

அன்பு தோழிக்கு அர்ப்பணம்..... 

எத்தனை எத்தனை உறவுகள் 
என்னை வந்தடைந்தபோதும், 
உன் அன்பிற்கு முன்னால் 
அவையெல்லாம் பின்னடைந்துபோகும்... 

பட படவென பேசும் 
உன் பாவத்திற்கு முன்னால், 
நான் செய்த பாவமெல்லாம் பட்டுபோகிறது.... 

என் தாய் வயிற்றிலும், தந்தை தோளிலும், 
காதலி என்னை இதயத்திலும் சுமந்தார்கள், 
நீ என்னை சுமக்க மறுத்தாய், 
ஏன்? என்றேன்... 
நீ எனக்கு சுமையல்லடா என்றாய்... 

கடலில் மூழ்கி முத்தெடுக்க போனேன், 
கறையில் வந்து உன் கவி படித்தேன், 
இரண்டும் எனக்கு வேறல்ல... 

இலக்கியப் பெண்ணிற்கு இலக்கணம் 
நீ என்று இலக்கணப்பிழை இல்லாமல் 
எப்படி இழைப்பேன் ஒரு கவிதை.... 

உன் கவிதைகள் இல்லாமல் 
வேதனைப்படும் நண்பர்கள் கூட்டத்தில் 
முதலில் நிற்பவன் நானே... 
உன் கவி இல்லா நாட்களெல்லாம் வீனே.... 

பேஸ் புக்கில் face பண்ணதில்ல 
ஜி-மெயில் ல் இ-மெயில் அனுப்பியதில்ல 
அழகியஇதழ்.காம் ல் எழுதப்பட்ட 
கவிதை நம் நட்பு.... 

இளகிய மனம் படைத்த 
நண்பர்களே ஜாக்கிரதை, 
திடமான என் இதயத்தையும் 
திகைக்க வைத்துவிட்டாள் என் தோழி 
உண்மை அன்பால்... 

பழகி விட்டு பதிய வைக்கும் 
நட்புகளுக்கு மத்தியில் 
நம் நட்பை கருத்தென்ற பெயரில் 
பதித்து விட்டு பழகி வருகிறோம்... 

எதையும் எதிர்ப்பாராமல் வந்த நட்பு 
என்னை எதிர்ப்பார்க்க வைத்துவிட்டது 
உன் முகம் காட்டுவாயா என்று... 

நான் படித்த கவிதைகளில் 
எனக்கு பிடித்த கவிதை நீ......