Alagiyaithal Chat


"தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க தோழி"

அன்பு தோழிக்கு அர்ப்பணம்..... 

எத்தனை எத்தனை உறவுகள் 
என்னை வந்தடைந்தபோதும், 
உன் அன்பிற்கு முன்னால் 
அவையெல்லாம் பின்னடைந்துபோகும்... 

பட படவென பேசும் 
உன் பாவத்திற்கு முன்னால், 
நான் செய்த பாவமெல்லாம் பட்டுபோகிறது.... 

என் தாய் வயிற்றிலும், தந்தை தோளிலும், 
காதலி என்னை இதயத்திலும் சுமந்தார்கள், 
நீ என்னை சுமக்க மறுத்தாய், 
ஏன்? என்றேன்... 
நீ எனக்கு சுமையல்லடா என்றாய்... 

கடலில் மூழ்கி முத்தெடுக்க போனேன், 
கறையில் வந்து உன் கவி படித்தேன், 
இரண்டும் எனக்கு வேறல்ல... 

இலக்கியப் பெண்ணிற்கு இலக்கணம் 
நீ என்று இலக்கணப்பிழை இல்லாமல் 
எப்படி இழைப்பேன் ஒரு கவிதை.... 

உன் கவிதைகள் இல்லாமல் 
வேதனைப்படும் நண்பர்கள் கூட்டத்தில் 
முதலில் நிற்பவன் நானே... 
உன் கவி இல்லா நாட்களெல்லாம் வீனே.... 

பேஸ் புக்கில் face பண்ணதில்ல 
ஜி-மெயில் ல் இ-மெயில் அனுப்பியதில்ல 
அழகியஇதழ்.காம் ல் எழுதப்பட்ட 
கவிதை நம் நட்பு.... 

இளகிய மனம் படைத்த 
நண்பர்களே ஜாக்கிரதை, 
திடமான என் இதயத்தையும் 
திகைக்க வைத்துவிட்டாள் என் தோழி 
உண்மை அன்பால்... 

பழகி விட்டு பதிய வைக்கும் 
நட்புகளுக்கு மத்தியில் 
நம் நட்பை கருத்தென்ற பெயரில் 
பதித்து விட்டு பழகி வருகிறோம்... 

எதையும் எதிர்ப்பாராமல் வந்த நட்பு 
என்னை எதிர்ப்பார்க்க வைத்துவிட்டது 
உன் முகம் காட்டுவாயா என்று... 

நான் படித்த கவிதைகளில் 
எனக்கு பிடித்த கவிதை நீ...... 

0 comments:

Post a Comment