Alagiyaithal Chat


என் இதய "தீபாவளி".........

"மத்தாப்பு" சிரிப்பிலே... 
"சங்கு" சக்கரமாய் 
சுழலவிட்டாள்.! 

என் "இதயத்தை" 

"சாட்டை" பார்வையிலே... 
"சர" வெடியாய் 
வெடிக்க செய்தாள்.! 

என் "இதயத்தை" 

"பொட்டுவெடி" பேச்சாலே... 
"புஸ்வானம்" போல் 
பொறிய வைத்தாள்.! 

என் "இதயத்தை" 

"ஏற்றி" வைத்த... 
"தீப" ஒளிகளால் 
சுடர் ஆக்கினாள்.! 

என் "இதயத்தை"
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

0 comments:

Post a Comment