
"மத்தாப்பு" சிரிப்பிலே...
"சங்கு" சக்கரமாய்
சுழலவிட்டாள்.!
என் "இதயத்தை"
"சாட்டை" பார்வையிலே...
"சர" வெடியாய்
வெடிக்க செய்தாள்.!
என் "இதயத்தை"
"பொட்டுவெடி" பேச்சாலே...
"புஸ்வானம்" போல்
பொறிய வைத்தாள்.!
என் "இதயத்தை"
"ஏற்றி" வைத்த...
"தீப" ஒளிகளால்
சுடர் ஆக்கினாள்.!
என் "இதயத்தை"

0 comments:
Post a Comment