
என் பெயர் எழுத பேனாவை எடுத்தேன்
அதுவோ உன் பெயர் ஆனது
என் உருவம் பார்க்க கண்ணாடி முன் நின்றேன்
அதிலோ உன் உருவம் காட்டியது
என்னை பற்றியே பேசிய நண்பர்களிடம்
உன்னை பற்றியே அதிகம் பேசினேன்
என் கனவுகளை மட்டுமே சிந்தித்த
என் உள்ளம் உன்னை பற்றியே சிந்திக்கிறது
அந்த சிந்தனையால் தவறேதும் வந்தால்
அதுவும் சுகமாகத்தான் தெரிகிறது
0 comments:
Post a Comment